11.16.2023

கனா கண்டேன்...

கனா கண்டேன்...


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


அவ்வையின் பாடசாலையைக் கண்டேன்! 


பாரதி அங்கு புதுமைகளைக் கற்பிக்கும் காட்சிகளைக் கண்டேன்! 


அகத்தியர் வள்ளுவனிடம் பேசக் கண்டேன்! 


மாதம் மும்மாரி மழை பொழிவதைக் கண்டேன்! 


பாண்டிய தமிழ்ச் சங்கத்தில் 

சோழன் உரையாடக் கண்டேன்! 


கண்ணகியின் கால் சிலம்பின் மாணிக்கப் பரலைக் கண்டேன்! 


மதுரை எரிவதை கோவலன் அணைக்கக் கண்டேன்! 


சோழ தேசத்தின் செழிப்பைக் கண்டேன்! 


முல்லைக்குக் கொடுத்த தேரைக் கண்டேன்! 


அவ்வை உண்ட நெல்லிக்கனியையும் கண்டேன்! 


கல்லணைக்கு ஆங்கிலேயேன் கல்லை சுமக்கக் கண்டேன்! 


விடுதலைப்போரில் ராஜராஜனை கண்டேன்! 


ராஜேந்திர சோழனை கட்டபொம்மன் கட்டித்தழுவக் கண்டேன்! 


பாரதி 100 வருடம் வாழக் கண்டேன்! 


நள்ளிரவில் பெண் தன்னந்தனியாக வீதியில் நடக்கக் கண்டேன்! 


காந்தியடிகள் கண்ட கனவு பலித்ததென்று கணா கண்டேன்! 


கைபேசி சுமந்த கைகள் புத்தகங்களை ஏந்தக் கண்டேன்! 


உலகத் தமிழ் மாநாடு நடக்கக் கண்டேன்! 


தூய தமிழில் பதாகைகள் கண்டேன்! 


மக்கள் நெகிழிகளை தவிர்ப்பதை கண்டேன்! 


பொறியாளன் உழுவதைக் கண்டேன்! 


காதலர்களிடம் அகநானூற்றை கண்டேன்


நித்தம் இவ்வூர் பள்ளியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடக் கண்டேன்! 


நிலவிற்கு மனிதன் குடிபெயரவும் கண்டேன்! 


அங்கும் தமிழ் எழுத்து பொறிக்க கண்டேன்! 


புவியில் மக்களிடம் களவு இல்லாமை கண்டேன்! 


கள்ளுண்ணாமையும் கண்டேன்


பேரிடர் மற்றும் போர் அற்ற உலகைக் கண்டேன்! 


மனிதனும் மனித எந்திரமும் அளவற்ற அன்பைப் பரிமார கண்டேன்! 


தலைவர்களும் அறிஞர்களும் மறுபிறவி எடுக்கக் கண்டேன்! 


மனிதன் சூரியனைத் தொடுவதைக் கண்டேன்! 


வறுமை இல்லாத பசுமையைக் கண்டேன்! 


இயற்கையுடன் மக்கள் உறவாடக் கண்டேன்! 


கனவு மெய்ப்பட வேண்டும் என்று கனா கண்டேன்! 


தமிழ் அன்னை தலை கோதி எழுப்பும் வரை கனா கண்டேன்! 


தமிழ் ஆசிரியராய் எனக்கான பொறுப்பை என்னுள் உணரக் கண்டேன்! 



நன்றி!

தமிழ் வணக்கம்!! 


> மனோஜ்


2.04.2011



ஆயிரம் சொல்லவந்தேன்,
ஒவ்வொன்றாய் குளத்தில் போனது கல்லாய்
விலகி செல்கிறாய் நீ அலையாக .....
வழி தெரியாமல் மூழ்கிறேன் ஆழம் தெரியாமல்.....

11.07.2010

வாழ்த்தும் நெஞ்சம்...

வாழ்த்தும் நெஞ்சம்...

உன்னோடு நான் செலவிடும் நேரங்கள்
வண்ணங்களை பூசிக் கொள்கிறது
என் வாழ்க்கைச் சிறகுகள்...

என் தாய்மையை படைத்தை கடவுள்,
நீ தோன்றிய இந்நாள் தான்
என்னுலகிற்கும் பிறந்த நாள்..

நீ
என் இரண்டாம் துடிப்பு
என் கண்களை அவ்வபோது அலங்கரிக்கும் காட்சி..

இதோ உன் பிறந்தநாள் பரிசளிக்க
என் இதழ்கள் தொடங்கிவிட்டது

உனக்கு பரிசளிக்க என்னை தவிர என்னிடம்
எதுவுமே இல்லை
அத்தனையும் தாரை வார்த்து விட்டேன்
நீ வந்த நாளிலே...

அன்புடன்
உன்னவள்

10.07.2010

நிகழ்வுகள்...மாற்றங்கள்...

நிகழ்வுகள்...மாற்றங்கள்...

நீ பேசாத தருணங்கள், உன் கண்களும் ஊமைகள்.

வாய் விட்டு அழுவதற்கு, உதடுகள் கூட உதவ மறுக்கிறது.

தீக்குச்சி போல் மனம் உரசி உரசி எரிகிறது,
அவ்வப்போது உன் நினைவுகள் அதனை அணைக்கிறது.

கண்கள் அணை திறக்கிறது, கண்ணீர் பெருக்கில் புன்னகை அடித்து செல்ல படுகிறது.

அனால் என் கைகள் செய்ததென்னவோ,
இந்த கருப்பு காகிதத்தை கிழித்தது தான்.

அதனால் தோழியே....

விழி நீர் துடைக்க உன் கரங்கள் நீட்டு
பல்வரிசை வழியாக புன்னகை செய்
கிழிந்த மனதை தைக்க உன் கூந்தல் கொடு
கைகளை பிடித்து என் கற்பனைகளுக்கு முத்தமிடு
கவலைகளுக்கு இனி என்றுமே விடுமுறை தான்.


அழியாத அன்புடன்
மனோஜ்.

8.15.2010

என்ன தான் செய்வது....


மனம் உண்ண மறுத்து பசியெய் போக்கிறது...

இமை மூட மறுத்து கனவினை கலைக்கிறது....

வெளிச்சம் வந்து இரவினை எழுப்பும்வேளையும் வந்தது...

நான் வாய் திறந்து நீ கேட்கும் மொழி பேச வைக்கிறது....

உன் எதிர்பர்புக்கள் பின்னிய கயிற்றில்என் சிந்தனைகளை எழுகிறது....

கண்களில் ஓரம் கசிந்த கண்ணீரை துடைத்து உன் கைகள் சொன்னது இக்கணம் நட்பிற்கு இலக்கணம்....

அழியாத அன்புடன்
மனோஜ்

7.21.2010

இருக்கத்தான் செய்கிறார்கள்!!!


இருக்கத்தான் செய்கிறார்கள்!!!

பிச்சைகாரனை விரட்டிவிட்டு,
அறம் செய்ய விரும்பு என்று பிள்ளைக்கு பாடம்!

வண்ணத்தொலைக்காட்சி கொடுத்தாலும்
மின்சாரம் இல்லை!

புண்ணியஸ்தலம் பல இருப்பின்
பாவத்திற்கு குறை இல்லை
கோவிலுக்குள் பூசாரி!

உள்நாட்டில் குண்டு வெடிப்புகள்
உச்சிமாநாட்டில் உலக சமாதான கையொப்பம்!!

மழை நின்றும் துவானம் விடவில்லை
ஈழத்திற்கு பிறகு பலரின் பேச்சு!

அந்நிய மண்ணில் அவன் வேலையில் நான்
அந்த வகையில் நானும் ஒரு சந்தர்ப்பவாதி!!!

அழியாத அன்புடன்
மனோஜ்.

2.06.2009

என்னை போல் ஆயிரம்....

கனவிலும் அமைதி இல்லை
நண்பனின் குறட்டை

உண்ணும் போது புறை ஏறியும்
தட்ட வில்லை
நினைப்பது அவள்

பேருந்திலும் இயற்கையை ரசிக்க முடியவில்லை
சில்லறை பாக்கி

பதில் சொல்ல முடியவில்லை
காதலியின் சந்தேகம்

நாள்ளெல்லாம் உழைக்கிறேன்
வியர்வை இல்லை
அனலாக கணிபொறி

நிம்மதியை கோவிலில் தேட
அங்கும்
ஆயிரத்தில் ஒரவன் நான்....

அழியாத அன்புடன்
மனோஜ்