12.06.2008

காதலியே...

- காதலியே...

நீயே கொன்றாலும் சாகவேண்டும் உன் மடியில்....

9.17.2008

காதலை எண்ணுகுறேன் ....

காதலை எண்ணுகுறேன் ....

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை

காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒயாரோ ?
உன் காதலில் வாழ்வது யாரோ ?உன் கனவினில் நிறைவது யாரோ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ!?

ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ?
ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா?இலையை போல் என் இதயம் தவறி விழுது.

-- யாரோ :)

7.11.2008

வாழ்த்து..

வாழ்த்து..

புன்னகையுடன் மலர்ந்த கண்கள் கண்டது
அந்த காலை மலர்ச்சியை,
வாய்வழியாக உன் சிரிப்பாலும்,
சப்தத்தை செவிகளும் உணர்ந்த வேளையில்
அந்த உன்னதமான மௌனத்தை உன் மனதும் அறியும்,

இந்நாளில் ஏன் இந்த மாற்றம்,

வருடம் முழுவதும்
வாழ்த்துக்களை வாழ வைக்க வந்தவார்த்தைகளை வாரிக்கொள் வாழ்வென்கிலும் இரைதிரிக்கிறோம் உனக்காக !!

உறவுகள் சூழட்டும்,
புன்னகை ஆளட்டும்,

மனதில் மத்தாப்பு பொறிக்கட்டும்
சிரிப்பிலே உன் வாழ்வு உன்னிடம்
சிறை கொள்ளட்டும்...

வாழ்க வளமுடன் ...


அழியாத அன்புடன்,
மனோஜ்.....

7.02.2008

அந்நிய ப(ய)ணம்

அந்நிய ப(ய)ணம்..... (2)

கடைசி நேர படபடப்பு, நண்பர்களின் அன்பளிப்பு
பார்வையை மறைத்த கண்ணீர், கனவுகள்,
நினைவுகள் என எல்லாவற்றையும் மூட்டை கட்டினேன்
என்னோட துணி மணிகளோடு.

நிலவும் நட்சத்திரமும் ஒன்று கூடி
என்னை வாழ்த்தி வழியனுப்ப,
வீதியெங்கும் தெரு விளக்குகள்
இருட்டை அலங்கரிக்க, ஏனோ
சூரியனுக்கு வர மனமில்லை போலும்.

அந்த இரவு பொழுது பொழிந்தது மெல்லிய தூறல்,
மண் மணம் பரப்பிய வண்ணம்
இட்டது எனக்கு தண்டோரா,
சூரியன் எனக்காக காத்திருக்கிறான் அங்கு என்று.

அந்த கடைசி சில நிமிடங்கள்... தாயோடும் மண்ணோடும்,

(தொடரும்..)

6.26.2008

அந்நிய ப(ய)ணம்

அந்நிய ப(ய)ணம்.... (1)


நாள் ஒரு பொழுதில் உன்னை நீ நாடு கடத்திக்கொள்
பணிக்காக ப(ய)ணம் செய்
என்ற அழைப்பும் பொறுப்பும் சேர்ந்தே வந்தது.
வாழ்கையில் ஒன்றும் தனித்து வருவதில்லை
இன்பமும் சரி துன்பமும் சரி.


பிறந்த மண்ணையும், மக்களையும் காண முடியவில்லை
நேரமின்மை,
இவர் தான் என் பசியின்மை, துக்கமின்மைக்கு காரண கர்த்தா.
சொந்த பந்தங்கள், நண்பர்கள், வீடு, வாசல் போன்ற பலவனக்கு
என் வார்த்தைகளை மட்டும் வீசிவிட்டு
நினைவுகளை எல்லாம் சுமந்து கொள்ள தயாரானேன்...

(தொடரும்...)

புரிதலும் பிரிதலும்..

புரிதலும் பிரிதலும்..

அன்பை ஆடம்பரமாய் செலவழித்தேன்,

அதை வறுமையின் வாசலில் விற்றுவிட்டாய்,

வருடங்களை வருடிய நம் பழக்கம் - புரிதலுக்கு காரணம்,

உன் வார்த்தைகலளிலும் உள்ளது நா பழக்கம் - பிரிதலுக்கு காரணம்.